தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு!

DIN

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

செம்மண் குவாரி முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான கெளதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான 9 இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். 

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பொன்முடியிடம் திங்கள்கிழமை இரவு 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT