தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்தது இலங்கை அரசு

DIN

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஜூலை 8 ஆம் தேதி சுமார் 500க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றபோது ஜூலை 9ல் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளனர். 

இந்த 15 பேர் மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்து கைது செய்யப்பட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் இலங்கை வசம் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT