தமிழ்நாடு

ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்

ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். 

DIN


ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். 

இதனைதொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலையில் ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த அமித்ஷாவை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் வரவேற்றார். இதன் பின்னர் கோயில் இணை ஆணையர் ச.மாரியப்பன் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். 

இதன் பின்னர் கோயிலுக்குள் சென்று ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். 

கோயில் வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிவு செய்த அமித் ஷா.

இதனைத்தொடர்ந்து, கோயில் வருகை பதிவேட்டில் ராமமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது தொர்பாக எழுதினார்.

ராமநாதசுவாமி கும்பிட்டு விட்டு பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்தேன். இங்கு கோடிக்கணக்கான மக்கள் மன அமைதிக்காக சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

ராமேசுவரம் ஒரு புண்ணிய பூமி "கடல் எந்த அளவு ஆழமாக உள்ளதோ அந்த அளவு மன அமைதியாக உள்ளது” என தனது கருத்தை அவர் பதிவு செய்தர்.

இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி  மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT