தமிழ்நாடு

ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்

ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். 

DIN


ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். 

இதனைதொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலையில் ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த அமித்ஷாவை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் வரவேற்றார். இதன் பின்னர் கோயில் இணை ஆணையர் ச.மாரியப்பன் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். 

இதன் பின்னர் கோயிலுக்குள் சென்று ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். 

கோயில் வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிவு செய்த அமித் ஷா.

இதனைத்தொடர்ந்து, கோயில் வருகை பதிவேட்டில் ராமமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது தொர்பாக எழுதினார்.

ராமநாதசுவாமி கும்பிட்டு விட்டு பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்தேன். இங்கு கோடிக்கணக்கான மக்கள் மன அமைதிக்காக சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

ராமேசுவரம் ஒரு புண்ணிய பூமி "கடல் எந்த அளவு ஆழமாக உள்ளதோ அந்த அளவு மன அமைதியாக உள்ளது” என தனது கருத்தை அவர் பதிவு செய்தர்.

இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி  மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT