இரு வாரத்தில் 60 ஆயிரம் பேரை ஈர்த்த கலைஞர் நூற்றாண்டு நூலகம்
இரு வாரத்தில் 60 ஆயிரம் பேர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டுள்ளனர்.
இரு வாரத்தில் 60 ஆயிரம் பேர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டுள்ளனர்.
மதுரை புதுநத்தம் சாலையில் கடந்த ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினால் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
7 தளங்களுடன் 3.5 லட்சத்துக்கு அதிகமாக புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த 59 ஆயிரத்து 332 பேர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டிருப்பதாக கலைஞர் நூலகம் சார்பில் தகவல் வழங்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் கலைஞர் நூலகத்தை நோக்கி வருவதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.