FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையே ரயில் சேவை 2024 ஜனவரி 31 வரை ரத்து!

4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 ஜூன் 2023, 10:17 am IST
பகிர்:

சென்னை: 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

Advertisement

இந்த நிலையில், 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 31 ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments