தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையே ரயில் சேவை 2024 ஜனவரி 31 வரை ரத்து!

4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சென்னை: 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 31 ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு!! வெள்ளி எவ்வளவு?

தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நிற்கிறேன்! வேலைநிறுத்தத்துக்கு ராகுல் ஆதரவு!

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஊடகங்களின் முன்னோடி !

SCROLL FOR NEXT