முகப்பு
தமிழ்நாடு

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தமிழ்நாடு

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:02 PM
பகிர்:

சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை பெருநகர தலைமை சிபிசிஐடி தலைமை அலுவலகம் பழைய கமிஷ்னர் அலுவலகம் அருகில் உள்ளது. சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் உள்ள மொட்டை மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனை சிபிசிஐடி வளாக காவலர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயணைப்பு துறையினட் தீயை அணைக்க விரைந்து  வந்தனர்.

நான்காவது தளத்திற்கு மேல் உள்ள மொட்டை மாடியில்  ஏற்பட்ட தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும், சிபிசிஐடி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →