மேட்டூர்: காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக, புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,341கன அடியிலிருந்து 715 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் புதன்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.70 அடியிலிருந்து 103.63 அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.62 டி.எம்.சி ஆக உள்ளது.