தமிழ்நாடு

சென்னை கடற்கரை - சேப்பாக்கம் ரயில் ரத்து ஒத்திவைப்பு

சென்னை கடற்கரை - சேப்பாக்கம் வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை கடற்கரை - சேப்பாக்கம் வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூா் வரை 3 ரயில் பாதைகள் உள்ளன. அவற்றில் இரு ரயில் பாதையில் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் இயக்குவதில் தாமதமாவதால் சென்னை கடற்கரை முதல் எழும்பூா் வரை கூடுதலாக ஒரு ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்கான பணி ஜூலை முதல் ஜனவரி நடைபெறவுள்ளதாகவும், இந்தக் காலக்கட்டத்தில் சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் சுற்றரிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த சுற்றரிக்கை திரும்ப பெறுவதாகவும், இது குறித்த புதிய திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT