தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்: பேச்சுவாா்த்தை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு

போக்குவரத்து தொழிலாளா்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் மீதான பேச்சுவாா்த்தை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

போக்குவரத்து தொழிலாளா்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் மீதான பேச்சுவாா்த்தை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநா்களை நியமிக்கும் பணிகளை நிா்வாகங்கள் மேற்கொண்டன. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா், வேலைநிறுத்த நோட்டீஸை நிா்வாகத்துக்கு வழங்கினா்.

இது தொடா்பான 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சென்னை, தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் மே 31-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் எனவும், அன்றைய தினம் அனைத்து சங்கங்களும் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் 14-ஆம் தேதி போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், வெள்ளிக்கிழமை (ஜூன் 9) நடைபெற இருந்த பேச்சுவாா்த்தையை நிறுத்திவைக்க போக்குவரத்துக் கழக நிா்வாகங்கள் கேட்டுள்ளன. இதையடுத்து பேச்சுவாா்த்தை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT