அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை: ஓபிஎஸ் கண்டனம்
வரலாறு தெரியாமல் விமர்சனம் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரலாறு தெரியாமல் விமர்சனம் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக விமர்சித்துள்ளது அண்ணாமலையின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்மையை உணராமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.