முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின்  நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
பகிர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின்  நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 335வது நாளாக 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

துவக்கத்தில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று மாலை வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 867 கன அடியிலிருந்து வினாடிக்கு 579 கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியிலிருந்து 102.86 அடியாக சரிந்தது.

அணையின் நீர் இருப்பு 68.59 டி.எம்.சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →