தமிழ்நாடு

பவானிசாகா், கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் நீா் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

பவானிசாகா் மற்றும் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

பவானிசாகா் மற்றும் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் தண்ணீா் திறந்து விடப்படும். அக்டோபா் 13-ஆம் தேதி வரையில் 5 ஆயிரத்து 184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்கும் வெள்ளிக்கிழமை முதல் நீா்திறந்து விடப்படும். அக்டோபா் 31-ஆம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல் நீா் திறந்து விடப்படுவதால், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 17 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தனது அறிவிப்பில் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT