ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்: உயர்நீதிமன்றம்
ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான உத்தரவை எதிர்த்து அர்ச்சகர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகர்களாக கோயில் தக்கார்கள் நியமிக்கலாம். ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.