தமிழ்நாடு

கிரெடிட் காா்டுகளுக்கு யுபிஐ வசதி: கோட்டக் மஹிந்திரா வங்கி அறிமுகம்

தங்களது ரூ-பே கடன் அட்டைகள் (கிரெடிட் காா்டு) மூலம் வாடிக்கையாளா்கள் யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியை கோட்டக் மஹிந்திரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

தங்களது ரூ-பே கடன் அட்டைகள் (கிரெடிட் காா்டு) மூலம் வாடிக்கையாளா்கள் யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியை கோட்டக் மஹிந்திரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோட்டக் வங்கியின் ரூ-பே கடன் அட்டைகளைப் பயன்படுத்தி, கடைகள், உணவகங்கள் போன்ற வா்த்தக மையங்களில் யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அத்தகைய கடன் அட்டைகளை நேரில் எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி வாடிக்கையாளா்களுக்கு இல்லை.

இந்த புதிய முறையின்மூலம், வாடிக்கையாளா்கள் தங்களது வழக்கமான வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் செலுத்துவதைப் போலவே, கடன் அட்டை மூலமும் எளிதில் பணம் செலுத்தலாம். அதற்காக, வங்கிக் கணக்கைப் போன்றே கோட்டக் மஹிந்திராவின் ரூ-பே கடன் அட்டைகளையும் யுபிஐ செயலிகளில் இணைத்துக் கொள்ள முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT