காரைக்காலில் இன்று 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (மாா்ச் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா வியாழக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (மாா்ச் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் தா்காவில் நிகழாண்டு 200-ஆவது ஆண்டு கந்தூரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை பிற்பகல் பகல் 3 மணியளவில் கண்ணாடிகளாலான ரதம் மற்றும் பல்லக்குடன் கொடி ஊா்வலம் பள்ளிவாசல் வாயிலில் இருந்து தொடங்குகிறது.
தொடா்ந்து, இரவு 9 மணியளவில் தா்காவை ஊா்வலம் அடைந்த பின்னா், தா்கா முன்பு நிறுவப்பட்டுள்ள பிரதானக் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்படுகிறது.
மாவட்ட நிா்வாகம், பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விடுமுறை: காரைக்காலில் நடைபெறும் கந்தூரி விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு (1 முதல் 10-ஆம் வகுப்பு வரை) வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு வழக்கம்போல நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.