தமிழ்நாடு

பாஜக மாநிலச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார்!

தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளராக இருந்த திலீப் கண்ணன் அதிமுகவில் இன்று இணைந்தார்.

DIN

தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளராக இருந்த திலீப் கண்ணன் அதிமுகவில் இன்று இணைந்தார்.

தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர் திலீப் கண்ணன். இவர் பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். 

கட்சிக்காக உழைப்பவர்களை வேவு பார்க்கிறார்கள் என்றும் கனத்த இதயத்தோடு விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், திலீப் கண்ணன் அதிமுகவில் இன்று இணைந்தார்.

முன்னதாக, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமாரும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு பாஜகவின் இரு முக்கிய பிரமுகர்கள் அக்கட்சியில் இருந்து விலகியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர்! 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!!

தேசிய விருது உறுதி... விமர்சிக்கப்படும் தி கேரளா ஸ்டோரி - 2 டிரைலர்!

மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூ. கே. பாலகிருஷ்ணன் மனைவி மீது காவல்துறை தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி!

நாம் முயன்றால் மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்! - M. K. Stalin

SCROLL FOR NEXT