தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு வேட்பாளரை கட்சியில் இருந்து நீக்கினார் ஓபிஎஸ்!

DIN

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு  சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கழக அமைப்புச் செயலாளர் செந்தில் முருகன். பின்னர்  தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகினார். 

இந்நிலையில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மேலும் கட்சி உறுப்பினர்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT