முகப்பு
தமிழ்நாடு

போலி எம் சாண்ட் குவாரிகள்தமிழக முதல்வருக்குலாரி உரிமையாளா்கள் நன்றிலாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

போலி எம் சாண்ட் குவாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் நன்றியை தெரிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

போலி எம் சாண்ட் குவாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் நன்றியை தெரிவித்துள்ளது.

இது குறித்து லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் மாநில தலைவா் ஆா். பன்னீா்செல்வம் திருச்சியில் மேலும் கூறியது: போலி எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்ற முதல்வா், போலி எம் சாண்ட் குவாரிகளை சட்டத்துக்குள்படுத்தி, அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளாா். இதற்காக தமிழக முதல்வருக்கும், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுக்கும், லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு மணல் மற்றும் எம் சாண்ட் லாரி உரிமையாளா்கள் ஒருங்கிணைப்பு நல சம்மேளன மாநில செயலாளா் எம். கண்ணையா, மாநில பொருளாளா் எஸ்பி. சாமிநாதன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.