போதைப் பாக்கு விற்பனை: ஒரே நாளில் 29 போ் கைது
சென்னையில் போதைப் பாக்கு விற்பனை தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 29 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பாக்கு விற்பனை தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 29 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலைப் பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’” என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின்பேரில், புதன்கிழமை புகையிலைப் பொருள்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் பள்ளி, கல்லூரி பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. இதில் கல்வி நிறுவனங்கள் அருகே போதைப் பொருள்கள் விற்ாக 9 வழக்குகள் பதியப்பட்டு, 9 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ஒரு கிலோ போதைப் பாக்கு, 205 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல சென்னை முழுவதும் பிற பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பாக்கு விற்ாக 20 வழக்குகள் பதியப்பட்டு, 20 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 5 கிலோ போதைப் பாக்கு, தடை செய்யப்பட்ட 140 சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களை கடத்தி வருபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.