முகப்பு
தமிழ்நாடு

நிதியமைச்சரே ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார்: இபிஎஸ்

30 ஆயிரம் கோடி ஊழலை நிதியமைச்சரே அம்பலப்படுத்தியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 மே, 2023 at 7:43 PM
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
பகிர்:

30 ஆயிரம் கோடி ஊழலை நிதியமைச்சரே அம்பலப்படுத்தியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் தாதகாபட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 30 ஆயிரம் கோடி என்று அதிமுக சொல்லவில்லை; மாறாக நிதியமைச்சர் பிடிஆரே அம்பலப்படுத்தியுள்ளார். 

மடியில் கனம் இருப்பதால் திமுக தரப்பில் யாரும் இது குறித்து பேசவில்லை. அச்சமில்லை என்றால் இது குறித்து விவாதித்து உண்மை என்ன என்பதை நிரூபித்திருக்கலாம்.

Advertisement

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 12 மணி நேர வேலை திருத்த மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்துள்ளார். அதிமுக எப்போது ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.