நிதியமைச்சரே ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார்: இபிஎஸ்
30 ஆயிரம் கோடி ஊழலை நிதியமைச்சரே அம்பலப்படுத்தியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 ஆயிரம் கோடி ஊழலை நிதியமைச்சரே அம்பலப்படுத்தியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் தாதகாபட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 30 ஆயிரம் கோடி என்று அதிமுக சொல்லவில்லை; மாறாக நிதியமைச்சர் பிடிஆரே அம்பலப்படுத்தியுள்ளார்.
மடியில் கனம் இருப்பதால் திமுக தரப்பில் யாரும் இது குறித்து பேசவில்லை. அச்சமில்லை என்றால் இது குறித்து விவாதித்து உண்மை என்ன என்பதை நிரூபித்திருக்கலாம்.
Advertisement
Advertisement
தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 12 மணி நேர வேலை திருத்த மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்துள்ளார். அதிமுக எப்போது ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.