அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!
தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இழந்த ஐசிசி கோப்பைகள் குறித்து...
தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது 12ஆவது முறையாக ஐசிசி உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லாமல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணி ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. ஆனால், அந்த அணியில் டேவிட் மில்லர் இல்லாததும் குறிப்பிடத்தக்கது.
டேவிட் மில்லர் (36 வயது) கடந்த 2010-ல் தென்னாப்பிரிக்க ஒருநாள், டி20 அணியில் அறிமுகமாகினார். தற்போது வரை, அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கிறார்.
Advertisement
Advertisement
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தினார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய அவர் ஹார்திக் வீசிய பந்தில் சூர்யகுமார் எல்லைக் கோட்டில் மிகவும் நம்பமுடியாத ஒரு ஃபீல்டிங்கினால் ஆட்டமிழப்பார்.
ஒவ்வொரு முறையும் டேவிட் மில்லர் தோல்வியினால் வெளியேறும்போது தென்னாப்பிரிக்க அணி மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களுமே வருத்தத்தில் மூழ்குகிறார்கள். அதே அளவுக்கு, மில்லருக்கு அந்தளவுக்கு அதிர்ஷ்டமில்லை எனவும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
டேவிட் மில்லர் இழந்த ஐசிசி கோப்பைகள் விவரங்கள்
2013 - சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தோல்வி
2014 - டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி
2015 - ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி
2016 - டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றில் தோல்வி
2017 - சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்றில் தோல்வி
2019 - ஒருநாள் உலகக் கோப்பை குரூப் சுற்றில் தோல்வி
2021 - டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் தோல்வி
2022 - டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் தோல்வி
2023 - ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி
2024 - டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி
2025 - சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தோல்வி
2026 - டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி
David miller lost 12 icc tournaments... Most unluckiest Cricket Player in recent History
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.