தமிழ்நாடு

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நிர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவியில் திங்கள்கிழமை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த தடையை வனத்துறை நீக்கியுள்ளது.

சுருளி அருவி வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்ததால், கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். இந்த நிலையில், யானைகள் அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றதும் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை பிற்பகலில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே, சுற்றுலாப் பயணிகளை அருவிப் பகுதியிலிருந்து வனத் துறை ஊழியா்கள் வெளியேற்றினா்.

இந்த நிலையில், சுருளி அருவியில் நிர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

மே 17 முதல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

SCROLL FOR NEXT