தமிழ்நாடு

அரசு கலை கல்லூரிகளில் சேர மே-8 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் மே 8-19 வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  

DIN

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் மே 8-19 வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்யலாம். மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே 23க்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு கல்லூரி அளவில் மே 25-29 வரை நடத்தப்படும். 

அரசு கலைக் கல்லூரிகளில் சேர முதல்கட்ட பொது கலந்தாய்வு மே30 முதல் ஜூன் 9 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் மொத்தம், 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 உயா்வு

அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

ஓஎன்ஜிசி பள்ளியில் சப்த சக்தி சங்கம நிகழ்ச்சி

வரி நிலுவைகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி கோரிக்கை

SCROLL FOR NEXT