கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19-ல் துணைத்தேர்வு!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி  துணைத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

DIN

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி  துணைத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்தாண்டு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவிகள் 91.45 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகம். 

பிளஸ் 2 தேர்ச்சியில் முதல் மூன்று இடங்களை விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் பெற்றுள்ளது. 

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஜூன் 19-ல் நடைபெறும் துணைத்தேர்வுக்கு வின்ணப்பித்து பங்கேற்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகல்!

டிஜிட்டல் கைது! அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

84 மார்க் போதாது… சிவகுமாருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

அமெரிக்காவுக்கு நிலம் விற்று, காட்டு வழியாக சென்ற 50 இளைஞர்கள்! ஒருவர் செலவிட்டது ரூ.57 லட்சம்

அய்யனார் துணை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் தீபக்!

SCROLL FOR NEXT