தமிழ்நாடு

ஒகேனக்கல் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 50 பேர் காயம்

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் கனவாய் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

DIN

பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஒகேனக்கல் கனவாய் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியில் சேர்ந்த அரவிந்தன் (84) என்பவரின் இறுதி சடங்கிற்காக, பாலக்கோடு பகுதியில் இருந்து தனியார் பேருந்தின் மூலம் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளனர். இந்த பேருந்தினை பாலக்கோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (35) ஓட்டி வந்த நிலையில், ஒகேனக்கல் கனவாய் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து பேருந்தில் பயணித்த 50-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT