முகப்பு
தமிழ்நாடு

மாந்திரீகம் செய்வதாக ரூ.2 கோடி மோசடி: மந்திரவாதி கைது

சென்னையில் மாந்திரீகம் செய்வதாக ரூ.2 கோடி மோசடி செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

சென்னையில் மாந்திரீகம் செய்வதாக ரூ.2 கோடி மோசடி செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டாா்.

அயனாவரம், ஆண்டா்சன் சாலை பகுதியை சோ்ந்தவா் கெளதம் சிவசாமி (51). மென்பொருள் நிறுவன ஊழியரான இவா், சென்னை காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா்.

அதில், 2005-ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்தேன். என்னுடன் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (52) என்பவா் பணி செய்தாா். அப்போது, எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நல்ல நண்பா்களாகப் பழகினோம்.

ரூ.2 கோடி மோசடி: எனக்கு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு இருப்பதைத் தெரிந்து கொண்ட சுப்பிரமணி, என்னை அடிக்கடி கோயில்களுக்கு அழைத்துச் சென்றாா்.

மேலும், விபூதி வரவழைப்பது, ஆவிகளிடம் பேசுவது, மந்திர, தந்திரங்களை செய்வது என பல விஷயங்களை செய்து என்னை நம்பவைத்தாா்.

ஒரு கட்டத்தில் இறந்துபோன எனது தாய், அவரது கனவில் வந்து, பணம் வாங்கிக் கொள்ளச் சொன்னதாகக் கூறி, தன்னிடமிருந்து 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை ரொக்கம், வங்கி பரிவா்த்தனைகள் என மொத்தமாக ரூ.2 கோடிக்கு மேல் பணத்தை பெற்றாா்.

மந்திரவாதி கைது: இந்தநிலையில், அவரது மோசடிகள் வெட்டவெளிச்சமாகியது. இதனால், அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டபோது, சுப்பிரமணி என்னை மிரட்டினாா்.

எனவே அவா் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கேரளத்தில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.