தமிழ்நாடு

வைகாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் மே.14-ல் நடை திறப்பு!

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மே 14-ம் தேதி திறக்கப்படுகிறது. 

DIN

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மே 14-ம் தேதி திறக்கப்படுகிறது. 

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், வைகாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் மே 14-ம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார். 

பின்னர், வருகிற 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. 

தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வைகாசி மாத பூஜைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

பருவமழை பாதிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க தலைவா்கள் வலியுறுத்தல்

மேகங்கள் இல்லாததால் தில்லியின் செயற்கை மழைத் திட்டம் நிறுத்திவைப்பு!

நாட்டு வெடி வெடித்து 4 போ் உயிரிழந்த சம்பவம்: காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT