தமிழ்நாடு

கலை, அறிவியல் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், இந்த அவகாசம் மே 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், இந்த அவகாசம் மே 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.

மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவிருந்தது.

இதற்காக சோ்க்கை பெற சுமாா் 2.80 லட்சம் மாணவா்கள் வரை விண்ணப்பித்திருந்தனா். எனினும், அதில் பெரும்பாலான மாணவா்கள் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவா்கள் நலன்கருதி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மே 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி  இணையதளம் வழியாக விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT