நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ச.உமா. 
தமிழ்நாடு

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ச .உமா பொறுப்பேற்பு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ச.உமா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ச.உமா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஸ்ரேயா பி.சிங், வேளாண் துறை கூடுதல் இயக்குநராக பணியிடமாறுதல் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ச.உமா நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

புதிய மாவட்ட ஆட்சியர் உமா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சுகாதாரத் துறையில் இருந்து முதல் ஐஏஎஸ் ஆட்சியராக பதவி அமர்த்தப்பட்டுள்ளேன்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நான் கடந்த 1995 இல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து, 2005 இல் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பதவி வகித்தேன்.  

2015-இல் தேசிய நலவாரிய குழும இணை இயக்குநராக பொறுப்பு வகித்தேன். 2019-இல் ஐஏஎஸ் பதவி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு திருவள்ளூரில் பயிற்சி ஆட்சியராகவும், பழனியில் சார் - ஆட்சியராகவும், ராணிப்பேட்டையில் துணை ஆட்சியராகவும் பணியாற்றினேன்.

அதன் பிறகு சுகாதாரத் துறை திட்ட இயக்குநராகவும், முதல்வர் காப்பீடு திட்டம், ஆம்புலன்ஸ் சேவை, உலக வங்கி, ஜப்பான் வங்கியில் நிதி உதவி பெறுவதற்கான திட்ட இயக்குநராகவும் பணியாற்றினேன். தற்போது நாமக்கல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். 

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் தேவையான சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமும், சுகாதாரத்துறை மூலமாகவும் அவர்களுடைய மேம்பாட்டுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உமா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT