தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:வைகோ

வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

DIN

வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2011-12-ஆம் கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15,169 பகுதி நேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்கள் உடற்கல்வி, கணினிப் பயிற்சி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி 12 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனா். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனா். அவா்களின் கோரிக்கையை ஏற்று, பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT