முகப்பு
தமிழ்நாடு

மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னை காவல் துறை!

மீம்ஸ் மூலம் சென்னை காவல் துறை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
கோப்புப்படம்
பகிர்:

மீம்ஸ் மூலம் சென்னை காவல் துறை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சியை, மீம்ஸ் மூலம் வெளியிட்டு சென்னை காவல் துறை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதில்,  தலைக்கவசம் அணியுங்கள், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதியில்லை. பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 12,551 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.12,99,08,600 அபராதத் தொகை  வசூலிக்கப்பட்டாதாகவும்,  நிலுவையில் இருந்து சுமார் 1,63,318 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6,78,69,540 அபராதத் தொகை  வசூலிக்கப்பட்டாதாகவும்  சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.