தமிழ்நாடு

சிஐஐ-யின் தலைவராக ஆா்.தினேஷ் பொறுப்பேற்பு

DIN

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அதன்படி, சிஐஐ-யின் புதிய தலைவராக ஆா்.தினேஷ் பொறுப்பேற்றுகொண்டாா்.

2023-24 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகளை தோ்வு செய்ய இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தேசிய கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரான ஆா்.தினேஷ் சிஐஐயின் தலைவராகப் பதவியேற்றாா். மேலும் சஞ்சீவ் பூரி தலைவராகவும் (டெஸ்கிநேட்), ராஜீவ் மேமானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று கொண்டனா்.

சிஐஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆா்.தினேஷ், பஜாஜ் ஃபின்சா்வ் லிமிடெட் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரான சஞ்சீவ் பஜாஜிடம் இருந்து பொறுப்புகளை யேற்றுக் கொண்டாா். தினேஷ் நான்காம் தலைமுறை டிவிஎஸ் குடும்ப உறுப்பினா். அவா் மாநில, பிராந்திய மற்றும் தேசிய அளவில் பல ஆண்டுகளாக சிஐஐ உடன் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT