தமிழ்நாடு

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு தொல்லியல்துறையின் அகழாய்வில், செங்கல் கட்டுமானம் ஒன்று வெளிப்பட்டுள்ளது.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு தொல்லியல்துறையின் அகழாய்வில், செங்கல் கட்டுமானம் ஒன்று வெளிப்பட்டுள்ளது.

7 முதல் 19 செமீ ஆழத்தில் இந்த செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளது. தொடர்ந்து தொல்லியல் அலுவலரும் பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணி இயக்குநருமான தங்கதுரை தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வில், ஆம்போரா அடிப்பாகம், கூரை ஓடுகள், பல்வேறு மணிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டிருக்கும் தகவலுக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு. ராஜேந்திரன், நிறுவனர் ஆ. மணிகண்டன் ஆகியோர் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT