முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினின் 2-வது ஆட்சியில் ரூ. 2,000 மகளிர் உரிமைத்தொகை: அப்பாவு

முதல்வர் ஸ்டாலினின் இரண்டாவது ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகையாக ரூ. 2,000 வழங்கப்படும்: பேரவைத் தலைவர் மு. அப்பாவு

Updated On : 13 மார்ச், 2026 at 9:59 AM
அப்பாவு
பகிர்:

முதல்வர் ஸ்டாலினின் இரண்டாவது ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகையாக ரூ. 2,000 வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "எப்போது தேர்தல் வரும், முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போது வாக்களிப்போம் என்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் நன்றியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறைந்தபட்சமாக 53 சதவிகித வாக்குகளுடன் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவார்.

மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமர்வார். இரண்டாவது முறையாக ஆட்சியில் அமரும்போது, ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை கொடுக்க மாட்டார்; ரூ. 2,000-ஆக கொடுப்பார்.

பெட்ரோல், எரிவாயு இருப்பு 30 நாள்கள்வரையில் இருப்பதாக ஒரு வாரத்துக்கு முன்னர்தான் மத்திய அரசு கூறியது. ஆனால், எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை" என்று அப்பாவு தெரிவித்தார்.

summary

Chief Minister Stalin will assume office for a second time, says Tamil Nadu Assembly speaker M Appavu

முழு கட்டுரையைப் படிக்க →