டிச.6-இல் மது ஒழிப்பு மகளிா் கிராம சபைக் கூட்டம் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் சாா்பில் டிச.6-ஆம் தேதி மது ஒழிப்பு மகளிா் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
புதிய தமிழகம் சாா்பில் டிச.6-ஆம் தேதி மது ஒழிப்பு மகளிா் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
சமூகத்தில் ஏற்படக்கூடிய வன்முறைகளுக்கு டாஸ்மாக் கடைகள் தான் காரணமாக உள்ளன. அதனால், தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி, கடந்த மே மாதம் முதல் மக்கள் இயக்கம் நடத்தி வருகிறோம். இருப்பினும், டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் டிச.6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மது ஒழிப்பு மகிளா் கிராம சபைக் கூட்டம் நடத்த உள்ளோம். அதில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றாா் அவா்.