வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வரும் அமைச்சர் எ.வ.வேலு நண்பரான விழுப்புரம் பிரேம்நாத் வீடு 
தமிழ்நாடு

விழுப்புரத்தில் 4 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவின் நண்பரான விழுப்புரம் பிரேம்நாத்தின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

DIN

விழுப்புரம்: பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் நண்பரான விழுப்புரம் பிரேம்நாத்தின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பு புகாரின் பேரில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் எ.வ. வேலுவின் நெருங்கிய நண்பரான விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம்நாத்தின் வீடு அமைந்துள்ள சண்முகபுரம் காலனியிலுள்ள வீடு, கலைஞர் அறிவாலயம் அருகிலுள்ள மார்பிள் கடை, தங்கும் விடுதி, கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள மோட்டார் விற்பனை நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT