முகப்பு
தமிழ்நாடு

நில மோசடி விவகாரம்: நடிகை கெளதமியிடம் விசாரணை!

நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான கெளதமி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி விசாரணைக்காக இன்று ஆஜரானார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:19 AM
நடிகை கெளதமி
பகிர்:

நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான கெளதமி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி விசாரணைக்காக இன்று ஆஜரானார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கோட்டையூா் கிராமத்தில் தமக்கு சொந்தமான 46 ஏக்கர் நிலம் தொடர்பான மோசடி புகாரில் அழகப்பன் மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றபிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை கெளதமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். 

இது தொடர்பாக 30 நிமிடங்களுக்கு மேலாக நடிகை கெளதமியிடம் காவல் துறையினர் விசாரணை நடைத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.