தமிழ்நாடு

மயிலாப்பூர் சாய்பாபா கோயில் கோபுரத்தில் ராக்கெட் பட்டாசு விழுந்து தீ

DIN


சென்னை:  மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் கோபுர கலசத்தை சுற்றி உள்ள ஓலையில் ராக்கெட் பட்டாசு விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயிலில் கட்டப்பட்டு வரும் கோபுரத்தின் கலசத்தை சுற்றி கீற்று ஓலைகள் சுற்றப்பட்டு கோபுரம் தெரியாதவாறு மறைக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க | மனிதம் எங்கே போனது?

இந்த நிலையில், தீபாவளியையொட்டி அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதில், ஒரு ராக்கெட் பட்டாசு கோயிலின் கோபுரத்தை சுற்றப்பட்டிருந்த கீற்று ஓலைகள் மீது விழுந்ததால் தீப்பற்றியது. 

இதனையடுத்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT