தமிழ்நாடு

வங்கக்கடலில் புயல் சின்னம்: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

DIN

தூத்துக்குடி: தமிழக கடற்கரை பகுதிகளிலும், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

தமிழகக் கடல் பகுதி, குமரி கடல் பகுதி, அதையொட்டிய மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால், நாட்டுப் படகு, விசைப் படகு மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது. 

அதன்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்படகுகள் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT