வேங்கைவயம் விவகாரத்தில், உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி தெரியவந்தது.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இச்சம்பவத்தில் நேரடிச் சாட்சி யாரும் இல்லாததால், மரபணு பரிசோதனை உள்ளிட்ட முறைகளில் போலீஸாா் முயற்சித்து வருகின்றனா். அதன்படி இதுவரை 30 பேருக்கு மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேங்கைவயம் விவகாரத்தில், உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே மரபணு பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.