செம்பரம்பாக்கம் ஏரி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரி கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

DIN


காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால், பாதுகாப்பு கருதி ஞாயிற்றுக்கிழமை (அக்.8) 10 மணியளவில் வினாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி  உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால் ஏரி கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு: 

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும்.  இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். சனிக்கிழமை (அக்.7)  நீர் இருப்பு 21.96 அடியாகவும்,  கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.  

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின்  நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு  மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக, செம்பரம்பாக்கம்  ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  நாளை ஞாயிற்றுக்கிழமை காலை  (அக்.8) 10  மணியளவில் வினாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி  உபரி நீர் திறக்க  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT