தமிழ்நாடு

திமுக எம்.பி. ஆ. ராசாவின் சொத்துகள் முடக்கம்!

DIN

திமுக எம்.பி. ஆ.ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சரும் தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ. ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை இன்று கைப்பற்றியுள்ளது. 

இதுகுறித்து அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பதிவில், 'வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம், 2002 விதிகளின் கீழ், மத்திய முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குச் சொந்தமான 15 அசையாச் சொத்துகளை, அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

SCROLL FOR NEXT