முகப்பு
சங்கர் ஜிவால் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
சங்கர் ஜிவால் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவில், சென்னை பெருநகர வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிராங் டி.ரூபன், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆகவும் டி.ரமேஷ் அரும்பாக்கம் காவல் உதவி ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் தற்போது  மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.சி.பரத், நீலாங்கரை காவல் உதவி ஆணையராகவும், பாலகிருஷ்ண பிரபு, சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜா, சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையராகவும்,  தட்சணாமூர்த்தி, பூக்கடை காவல் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சரண்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருண், கோயம்பேடு காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுதர்சன், தி.நகர் காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →