கனிமொழி 
தமிழ்நாடு

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி

நாட்டில் பெண்கள் ஒடுக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், தாங்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.  

DIN

நாட்டில் பெண்கள் ஒடுக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், தாங்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.  

சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு இன்று (அக். 14) நடைபெற்று வருகிறது. திமுக  எம்.பி. கனிமொழி முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல பெண் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதில் பேசிய கனிமொழி எம்.பி., மத்திய பாஜக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் இடஒதுக்கீடு நிறைவேற 50 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் பாஜக அதனை நிறைவேற்றாது. 

பாஜக கூட்டணி அமைத்துள்ள புதுச்சேரியில் பட்டியலின பெண் என்பதால் அமைச்சரே ராஜிநாமா செய்யும் நிலை உள்ளது.  பழங்குடியின பெண் என்பதால் குடியரசுத் தலைவரும் பல இடங்களில் அவமதிக்கப்படுகிறார். பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள், நாங்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம். யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல் துறையில் இடமளிக்கப்பட்டது. கருணாநிதி இதனை சாத்தியப்படுத்தினார் எனக் குறிப்பிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT