தமிழ்நாடு

ஆயுத பூஜை: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது!

DIN

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

தமிழ்நாட்டில் அக்டோபா் 21, 22 ஆம் தேதிகளில் சனி, ஞாயிறு, 23 ஆம் தேதி ஆயுத பூஜை, 24 ஆம் தேதி விஜயதசமி என தொடா் விடுமுறையையொட்டி  சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

அதன்படி நாளை(அக். 20) முதல் 23 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் இந்த நாள்களில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மீறி விடுப்பு எடுத்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கெட் எடுத்தபின் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை?: சுனில் நரைன் பதில்!

ஆவேஷத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்!

பேசுவதற்கும் முறையிருக்கிறது; கே.எல்.ராகுலுக்காக குரல் கொடுத்த இந்திய வீரர்!

பாலியல் புகார்: பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டைப் பதிய நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT