கோப்புப்படம் 
தமிழ்நாடு

கரூா் அரசு மணல் குவாரிகளில் மீண்டும் 3வது முறையாக அமலாக்கத் துறையினா் சோதனை!

கரூரில் காவிரி ஆற்று பகுதிகளில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக  வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர் . 

DIN


கரூர்: கரூரில் காவிரி ஆற்று பகுதிகளில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக  வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வாங்கல் அருகே மல்லம்பாளையத்திலும், நன்னியூா்புதூரிலும் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இந்த குவாரிகளில் விதிமுறை மீறல் நடைபெற்று வருவதாகவும் எழுந்த புகாரையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினா். மேலும் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்படும் அரசு மணல் குவாரியிலும் சோதனை மேற்கொண்டனா். 

தொடா்ந்து இந்த குவாரிகள் செயல்படாமல் இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவிட்டுச் சென்றனர். 

இந்த நிலையில்,  கரூரில் காவிரி ஆற்று பகுதிகளில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 11 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 வரிகளுக்கே கதறும் பாஜக!” ராகுல் Vs ராஜ்நாத் சிங்! | செய்திகள்: சில வரிகளில் | 02.02.26

மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்துக்கான நிதியை குறைத்தது ஏன்?

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

SCROLL FOR NEXT