தமிழ்நாடு

கரூா் அரசு மணல் குவாரிகளில் மீண்டும் 3வது முறையாக அமலாக்கத் துறையினா் சோதனை!

DIN


கரூர்: கரூரில் காவிரி ஆற்று பகுதிகளில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக  வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வாங்கல் அருகே மல்லம்பாளையத்திலும், நன்னியூா்புதூரிலும் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இந்த குவாரிகளில் விதிமுறை மீறல் நடைபெற்று வருவதாகவும் எழுந்த புகாரையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினா். மேலும் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்படும் அரசு மணல் குவாரியிலும் சோதனை மேற்கொண்டனா். 

தொடா்ந்து இந்த குவாரிகள் செயல்படாமல் இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவிட்டுச் சென்றனர். 

இந்த நிலையில்,  கரூரில் காவிரி ஆற்று பகுதிகளில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 11 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர் . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT