நாளை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மாற்றம்!
ஆயுத பூஜையை முன்னிட்டு, திங்கள்கிழமை (அக்.23) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு, திங்கள்கிழமை (அக்.23) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
வழக்கமாக பொது விடுமுறை நாள்களில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படுவது வழக்கம்.
Advertisement
Advertisement
அந்த வகையில் , திங்கள்கிழமை (செப்.23) சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்மட்டம் 47.86 அடி!
எனவே, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.