முகப்பு
தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்: தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்; மக்கள் பீதியடைய வேண்டாம். எங்கள் சங்கத்தில் 1500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்த அறிவிப்பை தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என அறிவித்து இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →