முகப்பு
இந்தியா

14 மணி நேர பயணம் வீண்! மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய இண்டிகோ விமானம்

வான் வெளி கட்டுப்பாடுகளால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய இண்டிகோ விமானம்

Updated On : 9 மார்ச், 2026 at 2:58 PM
புது தில்லியிலிருந்து பிரிட்டனின் மான்செஸ்டருக்கு இன்று (மார்ச் 9) புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானம்
பகிர்:

புது தில்லி : புது தில்லியிலிருந்து பிரிட்டனின் மான்செஸ்டருக்கு இன்று (மார்ச் 9) புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று மீண்டும் தில்லிக்கே திருப்பி விடப்பட்டது. போயிங் 787 ரக இண்டிகோ விமானம் (6இ 033) மேற்காசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்ட திடீர் வான் வெளி கட்டுப்பாடுகளால் ஆப்பிரிக்காவின் எரிட்ரியா வான் வெளி வரை சென்ற பின், அந்த விமானம் மீண்டும் தில்லிக்கே திருப்பி விடப்பட்டது.

இன்று அதிகாலை 12.30 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் வளைகுடா வான் வெளி வழியைப் பயன்படுத்தாமல் எத்தியோபியா வழியாக ஆப்பிரிக்கா வான் வெளியைப் பயன்படுத்தி எரிட்ரியா வரை சென்றது. இந்நிலையில், சுமார் 8 மணி நேரம் பயணித்த அந்த விமானம் எரிட்ரியாவைத் தாண்டிச் செல்ல திடீரென விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டு திருப்பிச் செல்ல அறிவுறுத்தப்பட்டதாக இண்டிகோ தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, அந்த விமானம் தில்லியில் இன்று பகல் 2.30 மணிக்கு தரையிறங்கியது.

summary

IndiGo's Manchester flight returns to Delhi due to airspace curbs

முழு கட்டுரையைப் படிக்க →