தமிழகத்தில் இயல்பைவிட 39% மழைக் குறைவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 39% மழைக் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 39% மழைக் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
புயல்கள்(தேஜ் மற்றும் ஹமூன்) கரையை கடந்த நிலையில், தமிழத்தில் வடகிழக்குப் பருவமழை வலுவடைய தொடங்கி இருக்கிறது. மேலும், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை, இயல்பைவிட 39% மழை குறைவாக பெய்துள்ளது.
சென்னையில் இயல்பாக பெய்ய வேண்டிய 18 செ.மீ., மழையில் 73% குறைவாக அதாவது 5 செ.மீ., மட்டும் பெய்துள்ளது. கன்னியாகுமரியில் இயல்பான அளவான 19 செ.மீட்டரை விட 151% அதிகமாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: நீர்வளத் துறைக்கு புதிய வாகனங்களை வழங்கினார் முதல்வர்!
மேலும், தமிழகத்தில் அக்.25 முதல் 31 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.