முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இயல்பைவிட 39% மழைக் குறைவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 39% மழைக் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:13 AM
பகிர்:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 39% மழைக் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

புயல்கள்(தேஜ் மற்றும் ஹமூன்) கரையை கடந்த நிலையில்,  தமிழத்தில் வடகிழக்குப் பருவமழை வலுவடைய தொடங்கி இருக்கிறது. மேலும், தமிழகத்தில்  வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை, இயல்பைவிட 39% மழை குறைவாக பெய்துள்ளது.

சென்னையில் இயல்பாக பெய்ய வேண்டிய 18 செ.மீ., மழையில் 73% குறைவாக அதாவது 5 செ.மீ., மட்டும் பெய்துள்ளது. கன்னியாகுமரியில் இயல்பான அளவான 19 செ.மீட்டரை விட 151% அதிகமாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், தமிழகத்தில் அக்.25 முதல் 31 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →